Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2010

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா?

உறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள்! இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு!

வாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)

அன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான்.

மூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்! சிந்திக்கமாட்டீர்களா?

குர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே!

பெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!(நூல்கள்: புகாரி, அஹ்மத்)

மாநபியும் விஞ்ஞான அறிவிப்பும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா? ஆதாரம் இதோ!

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

இந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை?

மாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்

கண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்?

ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

மாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்

எங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா? ஆதாரம் இதோ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

மாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ? ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா?

இந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா?

கண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்!

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள்! உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா? அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார்? நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம்! அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா? ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்!

தரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்

இன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று! இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா?

உலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்

தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்!

  1. பிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா? அல்லது உலக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. அருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா? அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள்! இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்!

ஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா? இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ!

(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (குர்ஆன் 3:32)

கொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா?

அன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா? காரணங்கள் இதோ!

1.       சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

2.       தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

3.       தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து  இன்று அவர்கள் பெருநாள்  கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா? என்று பதறுகிறார்கள்!

4.       வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள்  கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்!

குடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான்! உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா? உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா? அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா?

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)

வாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட  அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்!

நீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்! இதனால்தானே நபிவழியை புறக்கணிக்கிறீர்கள்!

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் 6:106)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)

மத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை

இந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

மதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ

“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)

ஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது! அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? இதோ

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)

இப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)

உலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் 11:91)

நபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.(அல்குர்ஆன் 11:92)

நபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை!

என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)

எனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா? என்பதை  மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள்! ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம்! எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம்! நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)!

இதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்!

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? உங்கள் கொள்கை சரியா?

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:944)

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.

எனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள்! இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்!

நீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும்! எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை! THERE IS NO OPTION TO PROHIBIT QUR’AN & SUNNAH இதோ ஆதாரம்!

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)

இந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்

நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)

விஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள்! தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்

لا اله الا الله محمد رسول الله

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?


தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!

பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்

குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.

மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!

பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.

முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!


தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?

மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!

ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்

நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!

 

தப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது?

முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.

 

தப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்

இந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே! முஸ்லிமாக இருங்கள்! (“O Muslims! Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது!

 

தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சி

1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது!

 

தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்

இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!

 

இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை  பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?

 

இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன

1. முதல் கலிமா

அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்

 

2. ஐவேளை தொழுகை

உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!

 

3. இலம் மற்றும் ஜிக்ரு

அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது

 

4. இக்ரமே முஸ்லிம்

தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது

 

5. இக்லாஸ்-ஏ- நிய்யத்

மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!

 

6. தாபிர்-ஏ- வக்த்

குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்

 

புதிய தத்துவம் எண் 7

மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.

 

சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான  தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!


அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!

தப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்

 

இந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்!

 

அமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!

 

தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்

தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.

தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது

வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!

ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.

தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!

வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!

 

சர்வதேச தப்லிக் கூட்டம்

முதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMAWorld Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.

 

இரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும்.  கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.

 

தப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்?

அரசியல் தலைவர்கள்

  • பாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,
  • பரூக் லெஹரி,
  • நவாஸ் ஷெரீப்,
  • முன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்
  • பாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்

 

கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள்

  • ஷாஹீத் அப்ரிடி (பாகிஸ்தான்)
  • ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்)
  • இன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
  • முஷ்தாக் அஹமது (பாகிஸ்தான்)
  • சயீத் அன்வர் (பாகிஸ்தான்)
  • சலீம் மாலிக் (பாகிஸ்தான்)
  • மொயின் அக்தர் (பாகிஸ்தான்)
  • ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)
  • பாடகர் ஜுனைத் ஜம்ஷட்
  • குல்ஜார் ஆலம்
  • ஆலம்ஜேப் முஜாஹித்
  • தலைசிறந்த எழுத்தாளரான  டாக்டர் நாதிர் அலிகான்

 

(நன்றி en.wikipedia.org/wiki/Tablighi_Jamaat).

தப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா?


மஹ்ஷரில் தோல்வியுற வேண்டுமா? அப்போ வாங்க!

 

அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான் என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா? இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா?

 

எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? (25-28)

 

அந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா? எனக் கூறுவான் (25-27)

 

மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 2:86)

 

நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)

 

நாதாக்களும், தலைவர்களும் கைகொடுப்பார்களா?

அன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா? என்று கேட்பார்கள்! (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே! என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)

 

தவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)

 

இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)

 

ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)

 

நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)

 

அல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்

எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)

ஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமனவர்கள் (23-103)

 

சிந்திக்க சில தேன் துளிகள்

  • இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?

 

  • இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?

 

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?

 

  • இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?

 

  • இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது  உண்டா?

 

  • இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?

 

நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)

 

அழகிய அழைப்பு

தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.

குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!

இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!

குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)

அல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக!

குறிப்பு

இந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்!

தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல்  அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா? ஏன் இந்த இருதலைப்பட்சம்!

ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்!

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்

 

ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!

வழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

 

ஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

இந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது

அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)

இந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

 

இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

 

கிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

கிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.

இயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை! ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு  துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ! இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே! இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா?

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )

 

கப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.

 

முஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா?

 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

 

முடிவுரை

வழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா? படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்! அல்லாஹ் இவர்களுக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்!

நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)

 

 

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

 

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: –
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

 

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது


‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

 

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்


(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

 

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 

இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

 

 

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

 

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

Read Full Post »

%d bloggers like this: