Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர் 7th, 2010

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

நபிகள் நாயகம்தான் இறுதி நபியா? காதியாணிகளின் கேள்வி

 

கேள்வி எழுப்பியது காதியாணிகள்

எழுப்பியவர் Sabar ( jafarla@yahoo.co.in )

 

கேள்வி

ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?

 

பதில்

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டு விபரீதமான கேள்விகள் அடங்கி யுள்ளன. உங்கள் கருத்துப்படி இதோ அந்த 2 விபரீதங்கள்

1)      ஈஸா நபி வானில் உயர்த்தப்படவி்ல்லை!

2)      ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்துவிட்டார்!

 

விபரீதம் 1 (ஈஸா நபி வானில் உயர்த்தப் படவி்ல்லை) என்பதற்கான பதில்

ஈஸா நபி வானில் உயர்த்தப்பட்டார் என்று அருள்மறை குர்ஆனில் வல்லமைமிக்கவனும், ஞானமிக்க இறைவனாகிய எங்கள் இறைவன் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்!

 

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:158)

 

ஈஸா நபி வானில் உயர்த்தப்படவில்லை என்று நீங்கள் வாதிடுவதை ஏன் இங்கு விபரீதம் என்கிறோம் என்றால் இந்த அறிவிப்பை வெளியிடுபவன் அல்லாஹ்தான்! அதற்கு மேற்கண்ட 4-158 வசனம் சாட்சியாக உள்ளது. இதை காதியாணிகளாகிய  நீங்கள் மறுக்கிறீர்கள் இப்படி மறுப்பதனால் அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் தன்மைகளாகிய வல்லமை மிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்பதனை தாங்கள் நிராகரிக்கிறீர்கள். இதுதான் அந்த விபரீதம்.

 

அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த வல்லமை இல்லை என்று கூறவருகிறீர்களா?

 

அல்லாஹ் தன்னை ஞானமிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த ஞானம் இல்லை என்று கூறவருகிறீர்களா?

 

அல்லாஹ்வுக்கு வல்லமையும் உண்டு, ஞானமும் உண்டு எனவேதான் தனது இரண்டு வல்லமைகளை சுட்டிக்காட்டி மனிதனால் சாதிக்க முடியாத இந்த காரியத்தை தான் சாதித்தாக கூறுகிறான். (அல்லாஹு அக்பர்)

 

 

விபரீதம் 2 (ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்து விட்டார்) என்பதற்கான பதில்

 

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை மேலும் இயற்கையாக இன்னும் மரணிக் கவுமில்லை என்று அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்! இதோ அந்த வசனம்

 

 

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

 

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? அல்லது அவர் இயற்கையாக மரண மடைந்தார் என்றால் அதற்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது? காட்டவும்! இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று நீங்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு இதுபற்றிய எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக நீங்கள் மூடர்கள்தான் அதற்கான ஆதாரம் இதோ

 

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறினால் யுதர்களை பின்பற்றிவிடுவீர்கள்,

 

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறினால் கிருத்தவர்களை பின்பற்றிவிடுவீர்கள்

 

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி இயற்கையாகவே மரணித்து விட்டார் என்று கூறினால் அல்லாஹ்வை விட ஞானமிக்க வராகிவிடுவீர்கள்.

மேற்கண்ட இந்த மூன்றில் எந்த தத்துவத்தை பின்பற்ற போகிறீர்கள். அறிந்துக்கொள்க மேற்கண்ட 3 தத்துவத்தில் எந்த ஒன்றை பின்பற்றினாலும் அல்லாஹ்வின் லானத் (சாபத்திற்கு) ஆளாகிவிடுவீர்கள் என்று எச்சரிக்கிறோம்!

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மூமின் ஒரு முறைதான் படு குழியில் விழுவான் என்று கூறினார்கள். ஏற்கனவே இரண்டு பெரிய சமுதாயங்கள் இறைத்தூதர்களின் இரண்டாவது வருகையை எதிபார்த்து படுகுழியில் விழுந்து கிடக்கிறார்கள் அதைப் பார்த்திருந்தும் அதே தவறை இந்த மூட முல்லாக்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களை நாம் எப்படி மூமின் என்று சொல்ல முடியும்.

 

பதில்

ஒருவன் மூமின் என்பதற்கு அடிப்படை அடையாளம் அவன் படைத்த ரப்புல் ஆலமீனையும், இறுதித்தூதரான நபிகள் நாயகத்தையும் நம்புவதாகும். இந்த அடையாளம் நம்மிடம் உள்ளது ஏனெனில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்திக் கொண்டதாக அருள்மறையில் கூறுகிறான் அதை நாம் நம்புகிறோம் அதே நேரத்தில் இறுதி நபியாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈஸா நபி வானிலிருந்து இறங்கி வந்து தஜ்ஜால் என்ற கொடியவனை அழிப்பார் என்று கூறினார் அதையும் நாம் நம்புகிறோம். இந்த செய்தியின் மூலம் அல்லாஹ்வும் உண்மை கூறுகிறான் அவனது இறுதித்தூதரும் உண்மையை கூறுகிறார் இதனை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்! ஈஸா நபி வருவார் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா? இதோ

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

 

கேள்வி

மிஹ்ராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் சந்தித்தார்கள் இரண்டாவது வானத்தில் இசா (அலை) அவர்களுடன் யோவான் (யஹ்யா) நபி பார்த்தார்கள். அங்கு யாருடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்கள் ஆன்மீக ரீதியாக உயிருடன் இருந்தார்கள். அனால் இந்த மூட முல்லாக்கள் இசா நபி மட்டும் வானத்தில் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

 

பதில்

அட அடி முட்டாள் காதியாணிகளே அல்லாஹ் விதித்த இந்த சோதனையில் சிக்கிவிட்டீர்களே, விரைவில் சுதாரித்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை என்பது உங்களுக்கு புரியவில்லையா? மிஹ்ராஜை நம்புவதுதான் அந்த சோதனை!

 

  • நபிகளார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றதும் உண்மை
  • அங்கு இறந்த நபிமார்களை கண்டதும் உண்மை
  • அங்கு உயிருடன் உள்ள ஈஸா நபியை கண்டதும் உண்மை

 

அறிந்துக்கொள்க மிஹ்ராஜ் எனும் பயணம் இந்த புமியில் நடைபெறவில்லை மாறாக விண்ணுலகத்தில் நடைபெற்றது புமியில்தான் மரணித்தால் சடலம் இருக்கும் விண்ணுலகத்தில் யாருடை சடலமாவது இருக்குமா? விண்ணுலகம் என்ன உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கப்ருஸ்தானா? சடலம் இருக்க! அல்லாஹ் நாடினால் இறந்தவரை உயிர்ப்பிப்பான், உயிருள்ள ஈஸா நபியை தன்னிடம் வாழவழிவகையும் செய்வான்!

உங்கள் முட்டாள்தனத்தி்ற்கு இதோ மற்றுமொரு ஆதாரம் முன்வைக்கிறேன் கீழு உள்ளதை படியுங்கள்

 

எத்தனையோ நபிமார்கள் மரணித்தார்கள் அவர்களை நபிகள் நாயகம் மிஹ்ராஜில் சந்தித்தார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் அதுபோலத்தான் ஈஸா நபியும் மரணித்த நிலையில் அங்கு இருந்திருப்பார் அவரை நபிகளார் சந்தித்திருப்பார்கள் என்று கூற வருகிறீரா? அட காதியாணிகள் எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள், உயிருன் ஈஸா நபியும் இருந்திருக்கிறார் என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும் போது பார்த்துள்ளார்கள் இதை மறுப்பீர்களா? புரியவில்லையா?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தில் விண்ணுலகில் உயிருடன் சென்று திரும்பியுள்ளார் எனும்போது ஈஸா நபியினால் ஏன் அந்த விண்ணுலகில் உயிருடன் வாழ இயலாது?

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறுகிறீர்களே இது கிறிஸ்தவ நடை முறை இல்லையா?

பதில்

இத்தகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கியாம நாள் வரை உலகில் உள்ள அனைத்து காஃபிர்களும் கூட கூறுவார்கள் ஆனால் காதியாணிகளாகிய நீங்கள் கூறமாட்டீர்கள் போலும்! காஃபிர்களுக்கு உள்ள அடிப்படை அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கூறும் அருள்மறை வசனம் (அல்லாஹ்வின் வார்த்தைகள்)


முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்குர்ஆன் 33:40)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி முத்திரை என்று அல்லாஹ் கூறுகிறான் இதன் மூலம் யாரும் அவருக்குப் பின் நபியாக வரமாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது! இதோ இறுதி நபியின் இறுதிப்பேருரையின் கட்டளை

 

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத் தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளை தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான (மார்க்க வரி) ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காக படைத்துள்ள கவனத்தில் நுழைவீர்கள்.…………………. (நூல்: முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

 

 

காதியாணிகளே முத்திரை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாருடைய உள்ளங்களில் இறைநிராகரிப்புக்கான முத்திரை குத்தப்பட்டுவி்ட்டதோ அவர்களுக்கு இறுதி முத்திரை யைப் பற்றி எங்கே தெரியப்போகிறது! இதோ இதை அறிந்துக்கொள்ளுங்கள்!

 

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:7)

 

காதியாணிகளுக்கு எச்சரிக்கை

உண்மையை உணர மறுக்கும் காதியாணிகளே நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் கூறும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வாரும்!

இன்னும், (முஹம்மது (ஸல்) (என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2:23)

இது இயலாத காரியம் நீங்கள் பொய்யர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். உங்களுடைய குருட்டுத்தனமாக வாதம் எப்படி இருக்கிறதென்றால் இதோ இந்த அருள்மறை வசனத்தைத்தான் நினைவுட்டுகிறது!

 

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள். (14:10)

 

யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 19:75)

 

குறிப்பு

காதியாணிகளே அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் காபிர்களாக மரணித்து விடாதீர்கள்!

அல்ஹம்துலில்லாஹ்

 

Read Full Post »

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சுவர்க்கத்தில் எருமை மாடுகளா? காதியாணிகள் எனும் கருத்துக்குருடர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்

 

கேள்வி எழுப்பியது   காதியாணிகள்

எழுப்பியவர்          jafarla@yahoo.co.in

 

முன்னுரை

 

அன்பின் சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மனித இனம் அறிவு கொடுக்கப்பட்டு, சிந்திக்கக்கூடிய இனமாக இருக்கிறது எனவேதான் இறைவன் அறிவுக்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் சிந்திப்பதற்காக அல்குர்ஆனையும் அருளினான்! ஆனால் இன்றைய காலகட்டத்தில் காதியாணிகள் என்ற கருத்துக்குருடர்களின் கூட்டம் அல்குர்ஆனையும் நபிவழியையும் உணராமல் கீழ்தரமாக சித்தரித்து இஸ்லாத்தின் கண்ணியத்தின் மீது அநாகரிகமான கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகள் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொள்ள எழுப்பினால் பரவாயில்லை மாறாக இஸ்லாத்தை தகர்க்கும் விதமாக உள்ளதால் இவர்களின் தரத்தை தோலுறித்துக்காட்ட எண்ணி தக்க பதில்களை கட்டுரையாக வடிவமைத்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்! இதோ காதியாணிகள் எனது பிளாக் தளத்தில் தொடுத்த கேள்விகளுக்கான பதில்கள்

கேள்வி

இப்லீஸ் என்றால் ஒரு தனி படைப்பினம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இறைவன் உவமையாக கூறிய விசயங்களில் இதுவும் ஒன்று

பதில்

மேற்கண்ட கேள்வியின் மூலம் காதியாணிகள் இப்லிஸை ஏதோ உதாரணப் பொருள் என்றும் உவமை (எடுத்துக்காட்டு) என்றும் தான் நம்புகின்றனர் என்ற செய்தி உண்மையாகிவிட்டது. இது இவர்களின் மூட்டாள்தனத்திற்கு பறைசாற்றும் விதமாகவும் அமைந்துவிட்டது. ஏனென்றால் இப்லீஸ் தான் படைக்கப்பட்ட ஒரு படைப்பினம் என்று அல்லாஹ்விடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அறி்ந்துக்கொள்க இப்லிஸ் என்பவன் நெருப்பிலிருந்து படைக்கப்படட படைப்பினம்தான் ஜின்களும் இவனது இனம்தான். ஆதம் (மனிதனை) எவ்வாறு அல்லாஹ் படைத்தானோ அதுபோலத்தான் ஜிப்ரயீல், மீக்காயில் போன்ற மலக்குமார்களையும், இப்லீஸையும் அல்லாஹ் படைத்தான். ஆதாரம் வேண்டுமா?

 

இதோ இப்லீஸின் வாக்குமூலம்!

 

நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

 

 

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)

 

கேள்வி

நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் திருக்குரானில் கூறும் போது நீர் எறிந்த போது நீர் எறியவில்லை நிச்சயமாக  அல்லாஹ் தான் எறிந்தான் என்று வருகிறது. இதார்க்கு இந்த முல்லாக்கள் என்ன பதில் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகிவிட்டதாக கூறுவார்களா?

பதில்

இங்கு இந்த காதியாணிகள் முன்வைக்கும் சம்பவம் பத்ருப்போருடன் தொடர்புடையதாகும். இந்த பத்ருப்போர் அதில் கலந்துக்கொண்ட மூமின்களுக்கான சோதனையாகும்! ஏனெனில் பத்ருப்போரின் போது பகைவர்களின் கைகள் ஓங்கியிருந்ததாகும் அன்றைய தினம் அவர்களிடம் அனைத்துவிதமான போர் தளவாடங்கள், தந்திரங்கள் ஆக்ரோஷமான படைபலம் ஆகியவை இருந்ததாகவும் ஆனால் அதே வேளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தக்வா இறையச்சம் என்ற ஒரு பலத்தை மட்டும் நம்பியிருந்தாகவும் அறியமுடிகிறது இந்த சூழ்நிலையில் பத்ருப்போரில் பங்கேற்றவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து புறமுதுகு காட்டிவிடக்கூடாது அவ்வாறு போரிலிருந்து விலகிவிடுபவர்கள் மீது அல்லாஹ் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் எச்சரித்தான் இதோ அந்த குர்ஆன் வசனங்கள்

 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள். (அல்குர்ஆன் 8:15)

 

(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் – அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன் 8:16)

 

 

இந்த போரின் போது அல்லாஹ் தனது புறத்திலிருந்து எந்த கண்களும் பார்த்திராத வகையில் மலக்குகளை அனுப்பி முஸ்லிம்களுக்கு இறுதி வெற்றியை அளித்ததாகும் கூறப்படுகிறது. இதோ அதற்கான ஆதாரம்

 

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:17)

 

இந்த வசனத்தை வைத்துத்தான் இந்த காதியாணிகள் எனும் கருத்துக்குருடர்கள் தரம்புரள்கிறார்கள் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதிரிகளின் மீது மண்ணை எறிந்தபோது அதை அவர் எறியவில்லை அல்லாஹ்தான் எறிந்தான் என்று இருப்பதை படித்துவிட்டு நபிகளார் என்ன அல்லாஹ்வா? என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வாதம் இந்த காதியாணிகளின் அடிமுட்டாள்தனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்ப பகுதியில் அல்லாஹ் கூறுவது

 

வசனத்தின் ஆரம்ப பகுதியில்

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்;

 

வசனத்தின் மைய பகுதியில்

(பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்;

 

வசனத்தின் இறுதி பகுதியில்

முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்;

 

இந்த வசனத்தை கண்பார்வையற்ற குருடன் கேட்டால் கூட எளிதாக விளங்கிவிடுவான் ஆனால் கண்பார்வையிருந்தும் கருத்துக் குருடர்களாக இருக்கும் இந்த காதியாணிகள் விளங்க மாட்டார்கள்.

 

இதோ இந்த வசனத்தின் மைய பகுதியில் பகைவர்கள் மீது மண்ணை நபிகளார் எறியவில்லை அல்லாஹ்தான் எறிந்தான் என்பது போன்றே வசனத்தின் ஆரம்ப பகுதியில் எதிரியை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல மாறாக அல்லாஹ்தான் வெட்டினான் என்று கூறப்படுகிறது இங்கு நீங்கள் என்ற பண்மையின் மூலம் மூமின்களின் படைவீரர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான்! எனவே நபிகளாரை அல்லாஹ்வா? என்று கேள்வி எழுப்புவர்கள் மூமின் படைவீரர்களை அல்லாஹ்களா? என்று கேள்வி எழுப்புவார்களா?

 

பத்ருப் போரின் படிப்பினை என்ன? என்பதை அல்லாஹ் மூமின்களுக்கு விளக்குகிறான் அதுவும் நீங்கள் மேலே படித்த அல்லாஹ் எறிந்தான் என்ற வசனத்தி்ன் தொடர்ச்சியாக வரும் ஒரு வசனம் விளக்குகிறது!

 

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்). (அல்குர்ஆன் 8:19)

 

இந்த வசனத்தின் படிப்பினை என்னவெனில் இறைநிராகரிப் பவர்கள் தங்கள் பலத்தை மட்டுமே நம்புகிறார்கள் என்றும் இறைவிசுவாசிகளான மூமின்கள் தக்வா என்ற இறை நம்பிக்கையை மட்டுமே பலமாக நம்புகிறார்கள் என்பதுதான். எனவே வெற்றி தோல்வி என்பது அறிவு, படை, வீரம் ஆகிய பலத்தால் அல்ல மாறாக இறைநம்பிக்கை மற்றும் இறைநாட்டத்தில்தான் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்! (அல்ஹம்துலில்லாஹ்)

 

கேள்வி

இறைவன் தன்னைப்பற்றி கூறும்போது வானம் மற்றும் பூமியின்  ஒளியாக இருக்கிறான் என்று வருகிறது. இதை வைத்து ஒளியை பார்த்து அது இறைவன் என்று கூறுவீர்களா?

பதில்

காதியாணிகளின் இந்த கேள்வி அல்குர்ஆனின் கீழ்கண்ட வசனத்தை தகர்த்தெரியும்விதமாக உள்ளது இதோ அந்த இறைவசனம்

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். 24:36 (அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவு கூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள். (24:35)

 

இந்த வசனத்தில் அல்லாஹ்வை தன்னை ஒளியாக வர்ணிக்கிறான் இங்குள்ள ஒளி என்ற வார்த்தையை காதியாணிகள் படித்துக்கொண்டு சாதாரண ஒளியை நாம் பார்க்கிறோம் அதை அல்லாஹ் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று கிண்டலடிக்கின்றனர். ஆனால் இந்த மூடர்கள் இந்த ஒளி என்பதை சரியாக படிக்கவில்லை! இதோ விளக்கமாக படிக்கவும்!

 

ஒளி என்பது இரண்டு வகைப்படும் சாதாரணமான ஒளி மற்றும் அசாதாரணமான ஒளி! சாதாராணமான ஒளிக்கு உதாரணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டார்ச் லைட், மின்விளக்கு ஒளி ஆகியவையாகும். ஆனால் அல்லாஹ் தனக்கு உதாரணமாக கூறும் ஒளியை இந்த சாதாரணமான ஒளியுடன் ஒப்பிடவது மூடத்தனமாகும் ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும்போது மிக பிரம்மாண்டமான ஒளியை உவமையாக கூறுகிறான். இதோ ஆதாரம்

 

வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்;

 

இந்த அண்டத்தில் பல்வேறு வானங்களும் கணக்கிலடங்கா கோள்களும் உள்ளன அவை அனைத்தும் ஒரு அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியினால் மின்னுகின்றன. இந்த மிகப் பிரம்மாண்டமான ஒளியை அல்லாஹ் தனக்கு உவமை என்றுதான் கூறுகிறான். சிந்தித்துப்பாருங்கள் இந்த அண்டத்தின் மீதுள்ள இந்த பிரம்மாண்டமான ஒளியை அல்லாஹ் நீக்கிவிட்டு இருளை பரப்பிவிட்டால் மனிதனது டார்ச்லைட் உதவியுடன் வெளிச்சமிட்டு காட்ட இயலுமா? சாத்தியமே இல்லை! எனவேதான் மனிதனால் சாத்தியப்படாத ஒரு பொருளை அல்லாஹ் தனக்கு உவமையாக (எடுத்துக்காட்டாக) கூறுகிறான்! (சுப்ஹானல்லாஹ்)!

 

 

கேள்வி

சுவர்கத்திப்  பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது பாலாறுகளும், தேனாருகளும் ஓடும் என்று வருகிறது இதை வைத்து இவர்கள் சுவர்க்கத்தில் எருமை  மாடுகளின் கூட்டமும், தேனீக்களின் கூட்டமும் இருக்கிறது என்று கூறுவார்களா?

பதில்

இந்த கேள்வி எப்படி உள்ளதெனில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போன்று உள்ளது! அட அடி முட்டாள் காதியாணிகளே சுவர்கத்தில் தேனாறும் பாலாறும் ஓடுவது பற்றி சிந்திக்கிறீர்களே இந்த உலகில் உள்ள எறுமை அல்லது பசுமாட்டின் மடியில் பாலை சுரக்கச் செய்வதும் அல்லாஹ் தானே அதை உணரமாட்டீர்களோ? இதையும் சற்று உணருங்கள்.

 

கணவன் மனைவியிடையே அன்பை ஏற்படுத்துவதும் அதே நேரத்தில் ஆணுக்கு வீரியமிக்க விந்தணுக்களை கொடுப்பதும் அதன் மூலம் மனைவியை கருவுறச் செய்வதும், கருவுற்ற பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பதும் தான் நாடினால் அந்த தடுப்பதும் இறைவன் நாட்டமே!

 

இதுபோன்றுதான் ஒரு எறுமை அல்லது பசுமாட்டிற்கு மேய்ச்சல் நிலத்தை கொடுப்பதும் அதன் மூலம் அவைகளின் மடியில் பாலை சுரக்க வைப்பதும், அந்த பாலை மனிதன் சுவைக்கும்படி செய்வதும் இறைவன் நாட்டமே!

 

மனிதனுக்கு விளைநிலத்தை கொடுப்பதும் அதில் அவன் உழுதால் பயிரை முளைக்கச் செய்வதும் அந்த பயிர் அறுவடைக்கு தாயார்படுத்துவதும் தான் நாடினால் யானை,  மழைக்காற்று, வெள்ளம் ஆகியவற்றால் அழிக்கச் செய்வதும் இறைவனின் நாட்டமாகும்.

 

இறைவன் நாடினால் சூல் கொண்ட மேகங்களை உங்கள் பகுதிக்கு அனுப்புவான் பின்னர் உங்களை சோதிக்க நாடினால் காற்றின் மூலம் மழையை திசைமாற்றி பொழியச் செய்வான் இதுவும் இறைவனின் நாட்டம்தான்.

 

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்குர்அன் 47:15)

 

இந்த வசனத்தை நம்ப மறுக்கும் காதியாணிகள் இதன் மூலம் இறைநிராகரிப்பை முழுமையாக்கிக் கொள்கிறார்கள் என்பதும் அதை தங்கள் வாய்களாலேயே வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற உண்மையையும் இங்கு நாம் எத்திவைக்கிறோம்!

 

கேள்வி

திருக்குர்ஆன் கூறுகிறது இந்த உலகத்தில் குருடராக இருப்பவர், மறு உலகத்திலும் குருடராக இருப்பர். என்று வருகிறது. இங்கு ஆன்மீக ரீதியாக யாரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பார்களோ அவர்களை அல்லாஹ் மறுமையில் எழுப்பும் போது வெளிப்படையாக (கண் தெரியாதவராக)  குருடராகவே எழுப்புவான். ஆனால் இந்த மூட முல்லாக்கள் குடுக்கும் விளக்கம் என்ன தெரியுமா இந்த உலகத்தில் முடவனாக, குருடனாக, இருப்பவர்களை மறுமையில் எழுப்பும்போது முடவனாக குருடனாக எழுப்புவான் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

 

பதில்

மேற்கண்ட இந்த கேள்வியின் மூலம் இவர்கள் குர்ஆனுடைய வசனத்தை தவறாக திரித்து வதந்தியை பரப்புவது போன்று பரப்புகிறார்கள்! உண்மையில் குர்ஆனில் இந்த குருடர் என்ற வார்த்தையை பற்றி எவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்

 

யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான். (அல்குர்ஆன் 17:72)

 

இந்த வசனத்தில் சாதாரணமாக உடல் குறைபாடுள்ள குருடர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடவில்லை அதே போன்று ஒரு மனிதனுக்கு கண்பார்வையை பறித்து சோதிக்கும் ரப்புல் ஆலமீன் அந்த கண்பார்வையற்ற மனிதரை கேவலமாக கிண்டலடிப்பானா? செய்யமாட்டான் அவன் அல்லாஹ் கருணையாளன்! உடல் குறைபாடுள்ளவர்களை நேசிப்பான்.

 

குருட்டுத்தனமாக சிந்திக்கும் காதியாணிகளுக்கு வேண்டுமானால் மேற்கண்ட அருள்மறை வசனம் (17-22) சரியாக பொறுந்தும் ஏனெனில் இவர்கள் கண்பார்வையிருந்தும் நேர்வழியை அடையாத வழிகெட்ட கருத்துக்குருடர்கள் இவர்கள் இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து இனிமேலாவது மறுமைக்காக நேர்வழியை தேடட்டுமாக!

 

கேள்வி

நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தில் உள்ள நாயை சைத்தான் என்று கூறியதாக வருகிறது.  இதற்க்கெல்லாம் இவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்.

 

பதில்

வாருங்கள் நாய்களைப் பற்றி அறிந்துக்கொள்வோம்!

ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] “உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).

மேற்கண்ட அறிவிப்பின் மூலம் நாம் வீடுகளில் நாய்களை வளர்க்கக்கூடாது என்பது அறியமுடிகிறது அதே போன்று நாய்வளர்ப்பில் கீழ்கண்ட விதிவிலக்கு ஒன்றும் உள்ளது!

 

கால்நடைகளைக் காவல்காக்கும் நாயையும், வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)

 

காதியாணிகள் கேள்வி எழுப்புவது என்னவென்றால் கருப்பு நாயை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று கூறினார்கள் என்பதாகும். இவ்வாறு நபிகளார் கூறியிருந்தால் அவர் அந்த நேரத்தில் ஜின்-ஷைத்தானை கருப்பு நிறம் கொண்ட நாயின் வடிவத்தில் பார்த்திருக்கலாம் என்று நாம் கருதலாம் ஆனால் இதே நபிகளார் (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் கருப்பு நிற நாய்களை பார்த்தார்களோ அங்கெல்லாம் அந்த கூட்டங்களை ஷைத்தான்கள் என்று கூறினார்களா? இதை சிந்திக்க வேண்டாமா?

 

சரி இவர்கள் கூறுவது போன்று நபிகளார் கருப்பு நிற நாயை ஷைத்தான் என்று கருதினார் என்றே வைத்துக் கொள்வோம் அப்படியானால் மனிதனின் உடம்பில் ஓடும் ரத்ததத்தில் ஷைத்தான் ஓடுகிறான் என்றும் நபிகளார் கூறியதாக ஒரு ஹதீஸில் கூறப்படுகிறது எனவே மனித உடம்பில் உள்ள ரத்தம் ஷைத்தான் என்று இந்த காதியாணிகள் கூறுவார்களா? இதோ இந்த நபிமொழியையும் சற்று படியுங்கள்!

 

ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள். (புகாரி 2038)

எனவே எவ்வாறு நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு கருப்பு நாயை ஷைத்தான் என்று உவமையாக கூறினார்களோ அதே போன்றுதான் அல்லாஹ்வும் மனித ரத்த நாளங்களில் ஷைத்தான் ஓடுகிறான் என்று கூறுகிறான். இந்த விளக்கத்தின் மூலம் நாம் இங்கு அறிவது என்னவெனில் காதியாணிகளின் இரத்தத்தில் ஷைத்தான் கொஞ்சநஞ்சமல்ல மிக மிக அதிகமாகத் தான் ஓடுகிறான் என்று புலப்படுகிறது! (அல்லாஹு அக்பர்)

 

அன்பின் சகோதர சகோதரிகளே காதியாணிகள் எந்த அளவுக்கு தரம்கெட்ட வாதிடுகிறார்கள் என்பது இங்கு தோலுரித்துவிட்டோம் இனி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி இவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் தோலுரிப்போம் (இன்ஷா அல்லாஹ்)

 

குறிப்பு

குர்ஆன் ஹதீஸ் வசனங்கள் பல்வேறு இணையதளங்களிலிருந்து திரட்டப்பட்டவையாகும் ஜஜாகல்லாஹ் கைரன்!

 

பதிலை கொடுக்க சிந்திக்கும் ஆற்றலையும், நேரத்தையும் அறிவையும் கொடுத்தவன் அல்லாஹ் அவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்!

Read Full Post »

%d bloggers like this: